கொலைகாரி
கொலை
கொள்ளைக்காரி நீ
அன்பே
வண்டுகள் சுவைக்க முடியாத
உன் வாய் இதழ்கள்
எத்தனை சுவை
என்று எண்ணி பார்க்கவே
முடியவில்லை
எனக்கு
உனது கரங்களுக்கும்
கண்ணாடி வளையலுக்கும்
கடுமையான சண்டை
நடந்தது
தோற்று போனேன்
நான் உடைந்து
சிதறி
உனது கூந்தல் கள்
குதிரையை விட
வேகமாய் எங்கே
பயணம் செய்கிறது காற்றில்
நீ பேசாதே உன் இதழ்கள்
முத்தசண்டை
நடத்தி என்னை
மூர்ச்சையக்குகிறது
நீ காதுகளை
அலங்கரித்து கொள்ள
எனை கொன்று
ஏன் கம்மலக்கினாய்
முகத்தை அலங்கரித்து
கொண்டு எங்கே செல்கிறாய்
போருக்கா
உள்ளிருக்கும் எனது உயிரை
வெளிக்கொண்டு வரும்
அட்சயபாத்திரம் நீ
போர்வைக்குள் போரை
தொங்கிய நீ
என்னை அழிக்காது
என் இனத்தை
காப்பாற்றிவிட்டாய்
குழந்தையை பெற்று
கொடுத்து