இடைவெளிகள் ஆகுமா

உனக்கும் எனக்கும் வெகு தூரம்
ஏக்கமும் தூக்கமும் வெகு தூரம்

நீயும் நானும் நெஞ்சின் ஓரம்
நினைத்து பார்க்க இனிமை சேரும்

தேனும் பாலும் ஜோடி சேரும
கன்னியின் மனம் நினைத்தே சோறும்

வானும் பூமியும் அங்கே இங்கே
நின் முகமும் தான் எங்கே

காதலும் நேசமும் வைக்கப்பட்டதோ அடகு
காசும் பணமும் காவல்காக்குதோ அதை

நிலவும் நானும் சேர்ந்தே ஏங்க
என்று அழைக்கும் என்னுதடுகள் ஏங்க

இலையும் காற்றும் கை கோர்க்க
உன்னையும் என்னயும் யார் கோர்பா

தேயிலையும் பாலும் தேநீராக மணக்க
தேவியும் தேவனும் தேவர்களாக என்று கலக்க

இசையும் பாடலும் என்னை ஈர்க்க
இனியும் மனமும் உனை கேட்குமே

விறகும் கனலும் உலை எரியுதே
மறுகும் மெழுகு சிலை கரையுதே

வேருக்கும் இலைக்கும் ஊடல்கள் கூடுமா
துணைக்கும எனக்கும் இடைவெளிகள் ஆகுமா

எழுதியவர் : யாழினி வளன் (24-Aug-17, 2:03 am)
Tanglish : idaiveligal aakumaa
பார்வை : 1748

மேலே