மதமும் மனிதமும்

நான்
இவன்
அவன்
மூவரும் நண்பர்கள்

நான்
பிரியாணியும், கேக்கும் சாப்பிடும்
ஓர் இந்து

இவன்
கேக்கும், பொங்கலும் சாப்பிடும்
ஓர் இஸ்லாமியன்

அவன்
பிரியாணியும், பொங்கலும் சாப்பிடும்
ஒரு கிறிஸ்தவன்

எங்கள் நட்பிற்கு
மதங்கள் தடையாக இருந்ததில்லை
காரணம் - எங்கள்
மனங்கள் அன்பை மட்டுமே
பரிமாறிக்கொண்டதால்.

மதங்கள் என்பது
புனிதவழிபாடுகளுக்கே தவிர
மனித பலி பாடுகளுக்கல்ல

மதங்களால் நாங்கள் பிறக்கவில்லை
மதங்களைச் சொல்லி எங்களை வீழ்த்துவதற்கு.

மனிதர்களால்தான் பிறந்தோம்
மனிதர்களோடு வாழ்கிறோம்
மனிதர்களுக்காகவே மடிவோம்

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (24-Aug-17, 1:13 pm)
Tanglish : manitham
பார்வை : 215

மேலே