என் காதல் மனமே

முடிந்துவிட்ட கதையின் முதல் பக்கம் தேடித் தொலையும் மனமே.

காகிதமாய் எரியும் காதலின் எரியாத மீதியை எடுத்துச் சேமிக்கும் மனமே.

கால் ஒடிந்த காதலுக்கு கைத்தடி வேண்டுகின்ற மனமே.

காற்றடித்து கலைந்திட்ட காதல் மேகங்களைச் சேர்க்க துடிக்கும் மனமே.

ஈரமில்லா அவள் மனதை கண்ணீரில் நனைத்திடத் தவிக்கும் மனமே.

ஓ..!!..என் மனமே..

பாதை மாற்றி பயணம் கொள் மனமே.

கல்லறை நாடும் நாளில் கருவறை தேடும் மனமே.

மனிதரில்லா மாயக்காட்டினுள் மறைந்து போ மனமே.

அழிவில்லா அக்கினிப் பிளம்பினுள் ஆழ்ந்து போ மனமே.

முடிவிலாக் கருங்குழியைக் கடந்து போ மனமே.

தேடிக் காணா, இடம் தேடிப் போய்விடு, மனமே..

என் காதல் மனமே . . .

எழுதியவர் : சிவக்குமார்-"கரிசல்மகன்" (3-Sep-17, 2:02 pm)
சேர்த்தது : சிவக்குமார்
Tanglish : en kaadhal maname
பார்வை : 1230

மேலே