காதல் ஹலாலா ஹராமா

காதல் ஹலாலா ஹராமா என்கிறாள்..
காதலிக்கும் போது அன்பை ஹலால் ஆக்கி கொள்கிறேன் என்றேன்.

காதல் காமத்தின் ஊற்றல்லவா என்கிறாள்.
காமமின்றி நீயும் நானும் இல்லை என்றேன்.

காதலுக்கு காதலர்தினம் அவசியமா என்கிறாள்.
உன்னை பார்த்த தினத்தை மறக்க முடியாது என்றேன்.

காதல் நமக்கிடையே சாத்தியமா என்றாள்.
நான் ஆண் சாதி,நீ பெண் சாதி இது போதுமே என்றேன்.

காதலில் எது வரை வருவாய் என்றாள்.
பேரன் பேத்தி எல்லாம் எடுத்து வயோதிகமாகி,
உயிர் துறந்து உனக்கு முன் சென்று காத்திருப்பேன் என்றேன்.

எனக்கு முன்பு நீயும்,
உனக்கு முன்பு நானும் மரணிக்க கூடாது என்று
இறைவனிடம் பிராத்தனை செய்து கொண்டாள்....

எழுதியவர் : சையது சேக் (8-Sep-17, 9:47 pm)
சேர்த்தது : சையது சேக்
பார்வை : 117

மேலே