நமது நட்பு

வகுப்பறையில் அமர்த்தி பெற்றோர் விடைபெற
அழுது சிவந்த கண்களோடு
உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் சேர்ந்து ஒப்பிக்க
ஆரம்பித்தது நமது நட்பு!!

வகுப்பறை விட்டு வெளியேறி ஆசிரியரிடம் விடைபெற்று
அழுது சிவந்த கண்களோடு உணர்ந்தோம்
நமது நட்பின் ஆழத்தை!!

இத்தனை உணர்ச்சிகளோடு
பதினேழு வருடங்களை கடந்துவிட்டது
நமது நட்பு!!

எழுதியவர் : பூர்ணி கவி (9-Sep-17, 10:22 am)
சேர்த்தது : பூர்ணி கவி
Tanglish : namathu natpu
பார்வை : 1273

மேலே