பாதைகள் நீள்கிறது

என்ன எவ்ளோ வேணும்னாலும் திட்டு...
ஏன் மேல எவ்ளோ வேணும்னாலும் கோபப்படு.எங்கூட எவ்ளோ வேணும்னாலும் சண்டை போடு...என்ன அடிச்சே கொல்லு...ஆனா எங்கிட்ட உன்ன விட்டு போறேனு மட்டும் சொல்லிடாத...
நீ எங்கயோ நிம்மதியா இருக்கன்ற உன் நெனப்புலயே வாழ்ந்திடுவேன்.
ஆனா நீ போறன்ற வார்த்தையிலயே
என் உசுரு போயிடும்.

நீ போறதா இருந்தா
எங்கிட்ட சொல்லாமலே போய்டு.
உன் நிம்மதி தான் எனக்கு முக்கியம்.
உன் உடம்பையோ அழகையோ
நான் விரும்பல...
உன் மனச தான் விரும்பறேன்.
உன் நெனப்புலயே வாழ்ந்திடுவேன்.
என் நெனப்புல
நீ எப்பயும் சந்தோசமா...
எந்த குறையுமில்லாம....
நிம்மதியா வாழ்ந்துட்டுருப்ப...
நீ என்ன வெறுக்கறயா விரும்பறயான்றது எனக்கு வேண்டாம்.
நான் உன் மேல வச்ச அன்பு
என்னைக்கும் மாறாது.
நான் கட்டையில போகும் போதும்....

நீ சாகப்போறன்னு தெரிஞ்சா
என் உசுர உங்கிட்ட கொடுத்திடுவேன்.
ஒன்னு நீ பொழைப்ப.இல்ல உங்கூடவே சாவேன்.

நீ என்னை விட்டு விலகி போறன்னா.
அதுக்கு நிச்சயமா காரணம் இருக்கும்.
ஏன்னா நீ என் மேல வச்ச அன்பு உண்ம.
எனக்கு தெரியும்.
நான் உணர்றன்.
அப்படி இல்லாம
என் மேல கோபம் என்றாலும்
அதுக்கும் நான் தான் காரணம்.
உன் மேல கொண்ட அன்பு
அதிகமாகி
உனக்கு பாரமாகிட்ருக்கும்.

என்னோட இதயமா நீ இருக்க சோழா...
எப்பயும் எங்கூட இருப்ப...
நான் சுவாசிக்கும் ஒவ்வொரு நொடியிலும் உன்னை நேசித்தபடியே வாழ்வேன்
உன்னை பார்த்தபடியே
எந்தன் கண் மூடட்டும்...
இறுதியிலும்...
பாடையிலும் உந்தன் மடியில் நான் கிடக்க வேண்டும்...

உனக்கு தெரியுமா
நான் உங்கூட எப்பயும் பேசுவேன்...
நீ என் கண்ணுக்குள்ளயே இருக்க...

நான் உயிராலும் மனசாலும் உடம்பாலும் உங்களுக்கே உரியவள்.
உங்களுடைய அரியணை எனக்கு வேண்டாம்.
உங்க மனம் தான் நான் வாழும் இடமாக இருக்கணும்.
நீங்க வானதி என்று அழைக்கும் நொடிக்காய் காத்திருப்பேன்.
மூளையும் மனமும் சண்டையிட்டால் அன்பின்
முன்னால் ...
எப்பொழுதும் மனமே வெற்றி பெறும்.
நீங்கள் நிம்மதியாக இருக்கிறீர்கள் என்று வாழ்ந்து விட்டாலும்
வாழ்வின் இறுதியில்
உங்கள் மடியில் இறந்திடவே ஆசை...
உங்கள் குரலை கேட்டுக்கொண்டே...
உங்களை பார்த்துக்கொண்டே புன்னகைத்தபடி
உங்கள் மார்போடு முத்தமிட்டு
உங்களை அணைத்துக்கொண்டு
உயிரை விடவேண்டும்...
உங்களோடு கலந்திட வேண்டும்... கரைந்திட வேண்டும்...

எந்தன் மூளைக்கும் தெரியும்...
மனதிற்கும் தெரியும்...
எந்த நொடியிலும் ...
நாம் பிரிய மாட்டோம்...
தூரங்கள் பிரிவாகிடாது...
இரண்டு மனங்கள் இணைந்தபின்...
உடல்கள் தான் நமக்கு வேறு...
உள்ளங்கள் துடிப்பதெல்லாம் ஒன்று தான்...
நீ என்னை நினைத்து துடிக்கிறாய்...
நான் உன்னை நினைத்து துடிக்கிறேன்..


நீயும் நானும்
நமக்காக வாழ்கிறோம்...
ஒருவர் மீது ஒருவர் உண்மையான அன்போடு
உரிமையான கோபமும்..பாசமும்..ஊடலும்...
நட்பும்..காதலும் கொண்டு
உண்மையான நண்பர்களாக ...கணவன் மனைவியாக எல்லா நொடியும் வாழ்கிறோமடா...
என் ஆருயுர் கணவா...
தூக்கம் வருகிறது தலையணை எங்கே ...
இந்தாடி...
ஹா ஹா...
நீதானடா...
என் தலையணை...
இவ்வளவு எப்படி டி
எல்லாம் கற்பனை ...
நீயும் நானும் மட்டுமே உண்மை...
நம் அன்பு மட்டுமே உண்மை...
வானதியை அருண்மொழி அணைத்துக்கொள்ள...
வானதி இறுக்கி அணைத்துக்கொண்டாள்...
இந்த கற்பனை உலகில்
இப்படியே இருப்போமடி...
அருண்மொழி நெற்றியில் முத்தமிட்டு
இருப்போமடா...என்றாள்...
வானதியை தூக்கிக்கொண்டு நடக்க...
நெஞ்சோடு சாய்ந்து அருணை பார்த்து புன்னகைக்க...
அவனும் புன்னகைக்கிறான்...

பாதைகள் நீள்கிறது...
வசந்தங்கள் பிறக்கிறது...

~பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (12-Sep-17, 9:06 pm)
பார்வை : 180

மேலே