கவிதைத் திருவிழா-கூந்தலில் தைத்தவள்

நிலவினைக் கூந்தலில் தைத்தவள்
இவளா?
சிரிப்பொலித் துளிகளை சேமித்தக்
கடலா?
அரைநொடியில் பூக்கின்ற மலரா?
இவள்கண்கள் மின்னலின் நகழா?
இரவொன்று வந்தால்
நிலவினை அழைக்காமல்-அது
ஒருநாளும் இருக்காது!
காதலொன்று வந்தால்
ஆனந்தம் அழைக்காமல்-அது
நொடிக்கூட இருக்காது!
கைக்கோர்த்துப் போகும்
இடங்கள் எங்கும்
பூஞ்சோலையாகுதடி!
நீ பேசும் போது
நெஞ்சில் மலரும்
தேனை சிந்துதடி!!!

எழுதியவர் : sahulhameed (13-Sep-17, 7:48 pm)
பார்வை : 90

மேலே