தேடி அலைகிறான்
மானிட சேவையென
முரசு கொட்டி
கட்டியெழுப்பிய
கல்விக் கூடங்கள்
கட்டியவன்
பணம் பார்க்கக்
கற்றுக் கொண்டான்,
கற்கப் போனவன்
இருந்த வீட்டையும்
விற்றுவிட்டு
நடுவீதியில் நின்றான்.
உயிரைக் காக்க
இறைவனை வேண்டி
மருத்துவரை பார்த்து
மருந்து வாங்கியதில்
விலைவாசி உயர்வால
மருத்துவமோ
கொழுத்துபோனது,
பாவம் ஏழை உயிர்
பட்ட கடனாலும்
பாழ்பட்ட உடலாலும்
பட்டுபோனது.
மகுடம் சூட
மகுடி வாசித்து
மயங்க வைத்தவன்
உயர்ந்துபோனான்
இருப்பதையெல்லாம்
சுருட்டலானான்,
உயரத்தில்
ஏற்றிய பாமரனோ
இருந்ததையும் இழந்து
இலவசத்தைத்
தேடி அலைகிறான்