கரைகின்ற பொய் முகம்

நீண்ட
நெடுந்தூர பயணம்.
வானமும் பூமியும் கரிய வண்ணம் பூசி
காட்சிகள் ஏதும் காண முடியாத
காலத்தின் கணக்கற்ற
பயணம்.
காற்றும் புழுக்கமும்
கூதலும் சாரலும் கலந்த பயணம்
உள்ளே திரும்பி பார்த்தால் பல்வேறு முகங்கள்
இடைஇடையே உறவுகளின் முகங்கள்
அதோ அங்கே நீயும் கூட
என் பயணத்தின் துணையாய்
காலத்தின்
கணக்கில்லா
பிரபஞ்ச
வெளியில்
கரைகின்றன
பொய்
முகங்கள்.
என்றாவது
ஒரு நாள் என் முகம் கரையும் போது
என்னோடு வரப்போவது
யாருடைய
முகமோ?
விடை தெரியா
கேள்வியுடன்
வேதனையாய்
வெளியே வெறித்துப் பார்க்கிறேன்.
வானுக்கும் பூமிக்கும் வித்தியாசம் இல்லாமல்
எங்கும் ஒரே
அந்தகாரம்.
பொய்யான இந்த பயணத்தில் நித்தம் நித்தம் ஏன் போராட்டங்கள்?

எழுதியவர் : அபிமன்யு (2-Oct-17, 2:14 pm)
பார்வை : 186

மேலே