மன்னித்து விடு என்னை

வாய் தவறி வந்த வார்த்தை
வம்புச்சண்டைக்கு வித்திட்டது..!
தும்பாகப் பறந்து போக- நீ
அம்பாகப் பாய்ந்திடு என்னுள்..!!

உன் ஆசை தீரும் வரை துளைத்திடு,
என் உடலை... தவிர எ(உ)ன் இதயத்தை..!
உன் அம்புக் கணைகள் பாய்ந்தால்,
தாங்காது என் காதல் இ(ம)தயம்...!!

சிரிக்கத் தெரிந்த நமக்கு
சிரிப்பு வர மறுப்பது ஏன்..??
சொல்லடி பெண்ணே..,,,!!

ஆத்திரம் என்பது அவசரத்தில் வரும்
மூத்திரம் மாதிரி... அடக்கினால் ஆபத்து...!
பைத்தியம் ஆகுமுன் கொட்டிவிடு நொடி பத்தில்,
வைத்தியம் கிடைக்கும் உன் வம்புகள் அனைத்திற்கும்...!!

எமக்குள் ஏன் சண்டைகள் , சச்சரவுகள்...?
நமக்குள் பேசி தீர்த்துக் கொண்டால்..,
அலையும் மனத்தின் கேள்விகளுக்கு - அன்று
காலையே வைக்கலாம் முற்றுப்புள்ளி...!!

மன்னித்து விடு என்னை..,
தனித்து விட்டு விடாதே...!
மரணித்து விடுவேன் நான்..
சத்தியமாய்.....!!!!!!

எழுதியவர் : (5-Oct-17, 5:02 pm)
Tanglish : mannithu vidu ennai
பார்வை : 4713

மேலே