கடினமாக கரையும் இதயம்

அனுதினமும் உன்னை நிணைதேன்,
ஆசையுடன் உன்னை அழைத்தேன்,
அருகில் நீ இருப்பாய் என நிணைத்தேன்,
ஆசையுடன் நீ தந்த அந்த
கவருடன் கூடிய கடதாசி
பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்
தாண்டி என்னை பிழைக்க வைக்கிறது.

நான் ஒன்றும் சிறு பிள்ளை இல்லை
பெற முடியாத இடத்தில் தொலைத்ததை
எண்ணி அழுவதக்கு,
நான் ஒன்றும் தேவதாஸ் இல்லை
தாடி வளர்த்து கையுடன் மதுபான
போத்தலுடன் திரிவதக்கு,
நான் ஒன்றும் உன்னைப் போல் இல்லை
கணப் பொழுதில் கல்யானதுக்காய்
காதலனை மாற்றுவதக்கு,
என்னை நீ மறந்த அன்றே நான் உன்னை
மறந்துவிட்டேன்,
கனத்துவிட்ட இதயம் கரைய மறுக்கின்றது,
நீ விட்டு போன மறக்க முடியாத நினைவுகளை.

கவி விட்டு கரைத்து பார்க்கிறேன், கடினமாக
கரைகிறது என் இதயம்
இனி நான் நானாக வாழவேண்டும் என்
நெஞ்சு நிறைந்த காதலின் நினைவோடு,,,,

எழுதியவர் : மபாஸ் பரீத் (26-Jul-11, 5:40 pm)
சேர்த்தது : மபாஸ் பரீட்
பார்வை : 409

மேலே