எனக்கொரு ஆசை

கன்னி தமிழில் கவியெழுதும்
என் தோழனே...நான்
கணநேர நொடி மட்டும்
கடவுளாகும் வாய்ப்பிருந்தால்
உன் கடந்தகால நிகழ்வுகளில்
தடுக்கிவிழுந்த தவறுகளை
உன் நினைவுக்கும் காட்டாமல்
நிச்சயமாய் அழித்திருப்பேன் .

செறிவாய் நீ எழுதும் கவியினுள்
உன் சிந்தனை கருவாக நான்மாறி
சிதைந்துவிட ஆசையெனக்கு .

எழுதியவர் : செந்தமிழ் மொழி (12-Oct-17, 11:48 am)
Tanglish : enakoru aasai
பார்வை : 298

மேலே