செந்தமிழ் மொழி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செந்தமிழ் மொழி
இடம்:  Orathanadu
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Aug-2017
பார்த்தவர்கள்:  102
புள்ளி:  8

என் படைப்புகள்
செந்தமிழ் மொழி செய்திகள்
செந்தமிழ் மொழி - செந்தமிழ் மொழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Oct-2017 11:48 am

கன்னி தமிழில் கவியெழுதும்
என் தோழனே...நான்
கணநேர நொடி மட்டும்
கடவுளாகும் வாய்ப்பிருந்தால்
உன் கடந்தகால நிகழ்வுகளில்
தடுக்கிவிழுந்த தவறுகளை
உன் நினைவுக்கும் காட்டாமல்
நிச்சயமாய் அழித்திருப்பேன் .

செறிவாய் நீ எழுதும் கவியினுள்
உன் சிந்தனை கருவாக நான்மாறி
சிதைந்துவிட ஆசையெனக்கு .

மேலும்

வாழ்க்கை ஒரு அழகான பயணம் அந்தப்பயணத்தில் மரணம் வரை தொடர்கிறது சில மீள முடியாத உணர்வுகளின் வசந்தங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 13-Oct-2017 9:00 am
செந்தமிழ் மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Oct-2017 11:48 am

கன்னி தமிழில் கவியெழுதும்
என் தோழனே...நான்
கணநேர நொடி மட்டும்
கடவுளாகும் வாய்ப்பிருந்தால்
உன் கடந்தகால நிகழ்வுகளில்
தடுக்கிவிழுந்த தவறுகளை
உன் நினைவுக்கும் காட்டாமல்
நிச்சயமாய் அழித்திருப்பேன் .

செறிவாய் நீ எழுதும் கவியினுள்
உன் சிந்தனை கருவாக நான்மாறி
சிதைந்துவிட ஆசையெனக்கு .

மேலும்

வாழ்க்கை ஒரு அழகான பயணம் அந்தப்பயணத்தில் மரணம் வரை தொடர்கிறது சில மீள முடியாத உணர்வுகளின் வசந்தங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 13-Oct-2017 9:00 am
செந்தமிழ் மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2017 12:08 pm

உன் விரல் கோர்த்து
நடக்கும் தடத்தில்
கிடக்கும் முள்கூட
மொட்டாகுமே என்கால்களுக்கு !

துணையாக நீ வந்தால்
தூரமும் தொலைந்து போகுதே...
இணையாக நாம் நடக்க
இடைவெளியும் இம்சை ஆகுதே...

மேலும்

தித்திப்பான நினைவுகள் அமுதை விட இனிப்பானவை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 7:39 pm
அழகு ..சிறப்பு வாழ்த்துக்கள்.... செந்தமிழ் மொழி 28-Aug-2017 3:50 pm
அருமை சகோ 28-Aug-2017 12:29 pm
செந்தமிழ் மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2017 1:32 pm

அன்பினால் வந்த ஆசை...

தொட்டில் பருவம் முதல்
தொடர்ந்து வரும் உன் அன்பில்
தொலைந்துதான் போகிறேன்!

தேடித்தேடி நீ வந்து
தெகிட்டாமல் பாசம் காட்ட
திணறித்தான் போகிறேன்!

கல்வி கற்கையிலே
கவிதை போட்டியிலே
கட்டாயம் பரிசு எனக்கே .
காரணம் -கவியினை எழிலுடன்
கலங்காமல் நான் மொழிய
கற்று தந்தது நீ தானே!

கண்ணாமூச்சி விளையாட்டில்
கண்டுபிடிப்பது நானென்றால்
வேண்டுமென்றே என்முன் வந்து
விரைவாய் என்னை விடுவிப்பாயே!

அப்பாவின் பாசக்கூட்டில்
அடங்கி விடுவோம் நாம் இருவர்
எனக்கு மட்டும் இரட்டிப்பு மகிழ்ச்சி
பாசக்கூட்டில் இரு போர்வை
ஒன்று அப்பா , மற்றோன்று நீ !

தொலைதூரம் சென்றால

மேலும்

அடடா -இயல்பாக ..அருமையாக எழுதி இருக்கீர்கள் ...செந்தமிழ் மொழி ..வாழ்த்துக்கள் 28-Aug-2017 3:52 pm
அன்பின் தவம் ஜென்மங்களையும் கடந்தது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2017 6:58 pm
செந்தமிழ் மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2017 12:53 pm

கசிந்துருகும் என் அன்பினை
கனவுகளிலேயே தந்து விடுகிறேன் உனக்கு ...
காட்சியினில் தந்தேனென்றால்
கலாச்சார குற்றம் என்பர் நம்மில் பலர் ...

பக்குவமாய் நீ அதை
பத்திரப்படுத்தி வைத்திரு...
பாதி சாமத்தில் நான் கேப்பேன்

திணறி நீ போகாமல்
திருப்பியே கொடுத்திடு
வட்டியுடன் என் அன்பை...

மேலும்

திணறி நீ போகாமல் திருப்பியே கொடுத்திடு வட்டியுடன் என் அன்பை... அன்பு மட்டுமே கொடுப்பதினால் ..கூடிக்கொண்டே வரும் ...சிறப்பு செந்தமிழ் மொழி 28-Aug-2017 3:53 pm
அன்பை சொல்ல வார்த்தைகள் தேவையில்லை கண்களே உணர்த்தி விடும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Aug-2017 11:33 pm
கனவில் கசியும் அன்பு ! திருப்பித் தந்திடு பின்பு ! அழகான வேண்டுகோள் . வாழ்த்துகள் . 19-Aug-2017 1:54 pm
செந்தமிழ் மொழி - செந்தமிழ் மொழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2017 4:20 pm

என் அம்மாவாகிய அப்பாவிற்கு…

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கு...
முக்காலத்திலும் நீங்கள் துணையெனக்கு...
கருவில் சுமந்த தாயை கண்டது நினைவில் இல்லை...
உங்கள் கைபிடித்து நடைபயின்றது மட்டுமே என் வாழ்வின் ஆரம்பம்....

பள்ளி பருவம் தொட்டு…
உங்களின் பாசம் உணர்ந்த நாள்தொட்டு …
பார்க்கவில்லை ஒருவரை உங்களின்
பாசத்திற்கு ஈடான மற்றறொருவரை ....

பச்சோந்தி பாசம் காட்டி
பாதியில் விட்டுச்செல்லும் பலவகையான உறவுகள் ...
பலியிடப்படுவது என்னவோ பாசம் வைக்கும் உண்மை மனம்...

பணம் என்ற ஒற்றை வார்த்தையில்
மனதினை ஓடவிட்டு செல்லும் உறவுகளிடம்
பாசத்தினை எதிர்பார்த்தால்
பரிசாய் கிடைப்பது என்னவோ

மேலும்

அருமை ..அற்புதம் ... உன்னத உறவு ... ..உன்னத உயிர் அப்பா ...சிறப்புற கவி ஆற்றல் மேம்பட வாழ்த்துகிறேன் ..செந்தமிழ் மொழி 28-Aug-2017 3:57 pm
அருமை நட்பே....... இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள......... 21-Aug-2017 11:34 am
கிறுக்கல்களை அழகென்று புரிய வைத்ததும் நீயே தோழா...கருத்துக்கு நன்றி ... 19-Aug-2017 12:37 pm
தோழரின் ஊக்குவிப்பு என் எழுத்துக்கு உரம்..நன்றி தோழரே .... 19-Aug-2017 12:34 pm
செந்தமிழ் மொழி - கற்றது தமிழ் மாரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Aug-2017 4:50 pm

ஆசைக்குள் விஷம்

ஆசைக்குள் விஷம் வைத்து
என்னை அழ வைத்தது யாரோ?
அன்பிற்குள் பகை வைத்து
உறவை பிரித்து வைத்தது யாரோ?

அழகழகாய் கண்ட கனவை
கலைத்துவிட்டது யாரோ!
கலைந்தபின்னும் புதுக்கனவை
காணவைப்பது யாரோ!

பாசமெனும் நதியினிலே
நான் மூழ்கித் திளைத்தேன்
பல பேர் கரையேற
படகாக உழைத்தேன்!
காலமெனும் காற்றினிலே
கரை ஒதுங்கிப் போனேன்
கரையொதுங்கிய பின்னாலே
தனிமரமாய் ஆனேன்!

நேசம் வளர்த்த நெஞ்சத்தில்
வெறுப்பை வளர்த்தது யாரோ
வேஷம் போட்ட உறவுகளை
விளங்கிக் கொண்டதாலோ!

விளையாட்டாய் செய்த பிழை
விதியாகிப் போனதம்மா
விதியாடிய விளையாட்டில்
வாழ்க்கை வீணாகிப்போனதம்மா!

அடையாளம் அ

மேலும்

அழகழகாய் கண்ட கனவை கலைத்துவிட்டது அவளே-கலைத்தகாரணம் கனவினை நனவாக்கும் காரியம் தெரிந்ததாலே! காலமெனும் காற்றினிலே கரையொதுங்கிய உன்னை கண்டுகொண்டாள் அவளே.. கண்சிமிட்டும் நொடிகூட நழுவாமல் கரம்கோர்ப்பாள் அவளே! உனக்கான உறவு அவள் வேஷத்திற்கு அங்கு வேலையில்லை ... நேசத்திற்கு என்றுமே பஞ்சமில்லை ... பிழையிழைக்கா ஒருஉயிரை பேரண்டம் காணவில்லை ... விதியின்மேல் பழிபோட்டு வீசிவிடாதே வாழ்க்கையை ... அடையாளம் மாறிபோகும் -தவறில்லை நிலையான அடையாளம் நிழலுக்குக்கூட இல்லையே! நகையாடும் தவறிற்கு பித்தகாகிப்போனது உனைப்பார்த்து இனி இவன் கைக்குப்பதில் யவன் கைகளை தேடுவதென்று! அழும் கண்ணீரை நீ நிறுத்து ஆனந்த கண்ணீரை அவள் தருவாள் எதிர்காலம் மட்டுமின்றி ஏழுபிறவிக்காலமும் புரியும் அப்போது! வேரில்லா கொடிகூட விண்ணைத்தொடும் காலம்வரும் கொடியாக நீ பரவ கொண்டவள் அவள் துணையிருப்பாள்! கடலில் மூழ்கித்தான் முத்தெடுப்பர். மறந்துவிட்டாயோ-உனக்குள் நீ மூழ்கி உனக்கான முத்தெடு! பிழையை உரம் ஆக்கு. கனவும் நனவாகும்! 18-Aug-2017 1:58 pm
செந்தமிழ் மொழி - கற்றது தமிழ் மாரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2017 8:46 pm

வெட்கத்திற்கு விடுமுறை

பள்ளிப் பருவத்தில் உனை
பார்த்திருக்கக் கூடாதா
பாவாடை தாவணியில் உனை
ரசித்திருக்கக் கூடாதா
பொங்கி வடிந்த கண்ணீரை
உன் பொன்விரல்கள்
தீண்டியிருக்கக் கூடாதா?

பச்சை ஆடையில் பருவத்தின் உச்சத்தில்
பார்த்துக்கொண்டேமே அப்போதாவது
இதயம் பரிமாறியிருக்கக்கூடாதா?

ஒரே பேருந்தில் ஒன்றாக பயணித்தோமே
அப்போதாவது பார்வைகள்
உரசிக்கொண்டிருக்கக் கூடாதா?

என் உள்ளத்தின் கவிதைகள்
எப்படியாவது உன் காதுகளுக்கு
கேட்டிருக்கக் கூடாதா?

ஒரே ஒரு முறை
உன் அலைபேசியை என்னிடம்
நீ தொலைத்திருக்கக் கூடாதா?

உன் வெட்கத்திற்கு வெட்கம் வந்து
விடுமுறை எடுத்திருக்கக் கூடாதா?

என

மேலும்

நேசிப்பது நடக்காதவரை இன்னும் அதை நேசிக்க வைக்கிறது . 23-Aug-2017 4:25 pm
நன்றி..சகோதரி.. 19-Aug-2017 8:10 am
கூடாதா கூடாதா என கேட்ட கவிதை விடாது பிசைந்தது என் மனதை உணர்ச்சிகள் கொட்டி கிடக்கிறது வரியில் உள்ளம்தான் ஒட்டி கொள்கிறது வலியில்... மிக அழகு 18-Aug-2017 8:28 pm
ஏக்கத்தினால் எனக்குள் கவிதை பிறந்தது.. தூக்கம் தொலைந்ததனால் உங்கள் தோழமை கிடைத்தது.. நன்றி தோழரே.. 18-Aug-2017 1:42 pm
மேலும்...
கருத்துகள்

மேலே