தேநீருடன் நாம் பகிர்ந்து கொண்ட மாலைகள்

தேநீருடன் நாம் பகிர்ந்து கொண்ட
எத்தனையோ மாலைகளில்
முகில் திரை விலக்கி முகிழ்த்து வந்த நிலவின் அழகை
வானத்தில் நீ காட்டிய அந்த மாலைதான் நெஞ்சில் நிற்கிறது !
அன்று உன் கவிதை மனம் புரிந்தது !
தொலைவில் ஒரு நிலவு
அருகில் ஒரு நிலவு
இரண்டிற்கும் வித்தியாசம் தூரம்தான்
ஆனால் இரண்டிற்கும் தத்துவம் ஒன்றுதான்
அது காதல்தான் என்று நீ சொன்ன போது
உன் அந்தரங்க அழகு புரிந்தது !

------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Oct-17, 9:25 am)
பார்வை : 452

மேலே