பழக்க தோஷமா
ஆண்டு முழுதும் காத்தருள
ஆனை முகத்தானை
வீட்டிற்கு அழைத்து வந்து
வக்கனையா அமரவைத்து
வரம் கேட்டு, படையலிட்டு
தருவார் என நம்பி
தாள் தொட்டு வணங்கி—பின்
தூக்கி வீதிவலம் வந்து
கடலில் விட்டுபோனால்
கருணை காட்டுவாரா? நியாயமா?
காலமுழுதும் பாடுபட்டு
கஷ்டத்தில் உழன்றாலும்
கல்வி கொடுத்து
கரையேற்றி விட்டவருக்கு
நன்றிகடன் காட்டாம
பத்து மாதம் சுமந்து
பொத்தி,பொத்தி வளர்த்து
உதிரத்தை பாலாக்கி
ஊட்டி வளர்த்தவளுக்கு
உறுதுணையா இருக்காம
முடியாத காலத்தில்
முதியோர் இல்லத்தில்
முடிந்துபோக விடுவது
முறைதானா?—இல்லை
பழக்க தோஷமா?