என்ன வாழ்க்கை டா இது

✍பாலூட்டி வளர்த்த அன்னை கருவரையில் சுமந்தா உன்னை!👶
இன்பத் தமிழூட்டி வளர்த்த மண்னே கல்லரையிலும் சுமக்கும் உன்னே!🔥

பன்னாட்டு நிறுவனமொன்று-உன்
பண்பாட்டை அழிக்க
முயன்றதேனோ!😏
அந்நாட்டின் வியாபாரத்தை -நீ
நம்நாட்டில் விதைத்தனால் தானோ!

😫 முதல் தோன்றிய மொழி-இங்கே
முறிந்து கொண்டிருப்பதேனோ!😏
நம்நாட்டில் வேலைபார்பதற்கே
ஆங்கிலம் அடிப்படையானதால் தானோ!😫

அன்று கல்விக்கு கண்திறன்த காமராசரின் கொள்கை காரணமேனோ!😏
இன்று கல்விக்கே கண்மூடிய
அனிதாவின் ஆசையை புதைப்பதற்குத்தானோ!😫

அன்று பழங்காலத்து சித்தர்
பலர் மருத்துகளை
பட்டியலிட்டு காட்டியதேனோ!😏
இன்று பட்டதாரி மருத்துவர்கள்
பணமாக்கி மகிழ்ந்து கொண்டிருப்பதற்குதானோ!😫

கலையறுத்த கைகள் -இன்று
கழுத்தையறுத்த நிலமையேனோ!😏
தண்ணீர்க்கு நாம் ஏந்தும்
கரைகள் துடைப்பதற்குதானோ!😫

தாய் விட்டு போனா-உன்
தாயகம் தாங்கிடுமே!😏
தாயகமே போனதுன்னா-பல
தலைமுறையே அழிந்திடுமே!😫 #சிந்தித்துசெயலாற்றுவோம் #2021ல் #புதியதோர்தமிழகம்செய்வோம்✌💞

எழுதியவர் : சரவணன் (26-Oct-17, 2:09 pm)
பார்வை : 676

மேலே