கல்லறைப் பணங்கள்

பசியோடு அலைந்தேன்
பட்டினியோடு வாழ்ந்தேன்
வறுமையில் செத்தேன்
வாய்க்கு அரிசி கிடைத்தது
நாவிற்கு நீர் கிடைத்தது
புத்தாடை கிடைத்தது
மரக்கட்டில் கிடைத்தது
கைக்கு பணமும் கிடைத்தது
மண்ணிற்குள் வாழப் போனேன்
இந்தியா மீண்டும் என்னை
வறுமையாக்கியது
கைச்செலவுக்கு உறவுகள் தந்த பணத்தில்
ஐந்நூறும் ஆயிரமும் செல்லாமல் போனது
அச்சடித்தப் பணத்தில்
வராத பணத்தை தேடும் இந்தியாவே..!
மிச்ச பணங்கள் எங்களிடம்தான் இருக்கின்றன
வறுமையில் செத்தவன் பிணத்தை
பொறுமையாய் புதைத்த இந்தியாவில்
இனியாவது தேடுங்கள்..!
பிணங்களை அல்ல பணங்களை..!