தமிழ் வாத்தியாரின் தமிழ் புலமை

பள்ளிக்கூடத்தில் இருந்த தமிழ் வாத்தியார் ஒழிவு பெற்ற பின் ஒரு புது தமிழ் வாத்தியாரை
ஏற்பாடு பண்ணினார்கள் பள்ளி கூட நிர்வாகம்.
அன்று ஐந்தாம் வகுப்பு எடுக்க அவர் வகுப்பிலே நுழைந்தார்.அவர் தமிழில் மிகவும் பற்று
உடையவர்.எப்போதும் நல்ல இலக்கணமாக தான் பேசுவார்.மற்றவர்களும் அப்படி தான் பேசுவார்கள்
என்று எதிர் பார்ப்பார்.
வகுப்பிலே இருந்த மாணவ மாணவிகளை பேர்களை அவர் கேட்டார்.
முதலில் மாணவர்கள் அவர்கள் பேரை சொல்லி விட்டு உட்கார்ந்து கொண்டார்கள்.
அடுத்தது மாணவிகள் அவர்கள் பேரை சொல்லி கிட்டு இருந்தார்கள்.ஆறு பேர் தங்களை பேரை
சொன்னதும் ஏழாவது மாணவி எழுந்து நின்றுக் கொண்டு " என் பேர் மலர்ங்க" என்று சொன்னவுடனே
அவர் தன்னுடைய மூக்கு கண்ணாடியை கழட்டி விட்டு " என்னம்மா,நீ இன்னும் ரொம்ப சின்ன
பொண்ணு உன் பேர் எப்படி"" மலர்"ன்னு இருக்க முடியும்.நீ இன்னும் ரெண்டோ மூணோ வருஷம் கழிச்சு
நீ இந்த பேரை வச்சுக்க.அது வரைக்கும் உன் பேரை ""மொட்டு""ன்னு ன்னு சொல்லி வா.புரிதா" என்று
சொல்லி விட்டு தமிழ் பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.

எழுதியவர் : ஜெ சங்கரன் (27-Oct-17, 11:46 am)
சேர்த்தது : Sankaran
பார்வை : 136

மேலே