அக்கிரகாரத்தில் காதில் விழுந்தது

ஒரு அக்கிரகாரத்தில் ரெண்டு மாமிகளை பேசி கொண்ட சம்பாஷணை.

ஒரு மாமி அடுத்த மாமியிடம் "நான் பேசிக் கொண்டு இருக்கேனே ஒழிய என் ஆத்துக்காரர்
தலையை பாத்ததும் கல்லை போடுவேன்".

அடுத்த மாமி பயந்து போய் " நீங்க அவ்வளவு கல் நெஞ்சுக்கார மாமியா. எனக்கு தெரியாம போச்சு
தெரிஞ்சு இருந்தா உங்க கிட்டே பேசவே நந்து இருக்க மாட்டேன்
.
முதல் மாமி " நீங்க என்னை தப்பா புரிஞ்சுண்டு இருக்கேன் மாமி.நான் என் ஆத்துக்காரர் தலையைப்
பாத்ததும் தோசை கல்லை அடுப்பில் போடுவேன்.அவருக்கு தோசை நன்னா சூடா தான் இருந்தா தான்
சாப்பிட பிடிக்கும்"
இரண்டாவது மாமி முகத்திலே ஈயாடவில்லை!!!! 'ஏண்டா இந்த மாமி கிட்டே பேசினோம்' என்று
எண்ணிக் கொண்டே தன நடையை காட்டினாள்.
"

எழுதியவர் : ஜெ சங்கரன் (27-Oct-17, 11:19 am)
சேர்த்தது : Sankaran
பார்வை : 201

மேலே