நேசிக்கும் இதயத்தை சுவாசித்திடு
ஆசைக்கு அடிபணிந்து
ஆணும் பெண்ணும் கூடலாமா..?
அன்பு காட்டும் துனையே விட்டு
அடுத்தவரிடம் சேரலாமா..?
இருமனம் இனைந்த பின்னும்
இனையே மறந்து போகலாமா..?
இன்பம் என்பது உடலென்று
இல்லம் கடந்து வாழலாமா..?
இரை தேடும் பறவை கூட
இனையே மாற்ற நினைப்பதில்லை
இந்த பாலாப்போன மனிதன் மட்டும்
இழிவாகவே வாழுகின்றான்..!
இரு மனைவி பல கணவன்
இதிகாசத்தில் பிரச்சினை இல்லை
இயல்பு வாழ்க்கையில் செய்ய நினைத்தால்
இல்லறம் என்பது இருண்டு விடும்..!
நேரம் செல்லும் வேகத்தில்
நேர்மை வாழ்வு கடினமே
நேசிக்கும் இதயத்தை மட்டும்
சுவாசிக்கும் வாழ்வு புனிதமே..!
நேசிக்கும் இதயத்தை மட்டும்
சுவாசிக்கும் வாழ்வு புனிதமே..!!!