விழிகளில் செண்ணீர்

யாரென்று தெரியாது உன்னை
பாரென்று காட்டியது ஊடகங்கள்
வேரோடு சாய்ந்த மரத்தைப்போல்
நீரோடு கரைந்திருந்தது உன்னுயிர்
பெருகியது விழிகளில் செண்ணீர்
உருகியது உள்ளமும் சோகத்தால் ...

இயற்கைப் பேரிடரால் இறந்தாயோ
இருக்கப் பிடிக்காமல் மறைந்தாயோ
இதயங்கள் உறைந்தது காட்சிக்கண்டு
இவ்வுலகமே அழுதது உன்நிலையால் ..
-----------------------------

( மெரினா கடற்கரையில் இன்று மழை
நீரில் உயிரிழந்த அந்த பெரியவரின்
மறைவிற்கு வருந்துகிறேன் .
எவருக்கும் இந்நிலை வரக்கூடாது . )

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (3-Nov-17, 10:15 pm)
பார்வை : 735

மேலே