இனிய கவிதை க்கு

பேனாவும் இல்லை !
மையும் இல்லை !
ஆனால் !
மையல் உண்டு


எழுத்தும் இல்லை !
இலக்கணமும் இல்லை !
ஆனால் !
இன்பம் உண்டு !

தாள்கள் இல்லை !
வார்த்தைகள் இல்லை !
ஆனால் !
தித்திப்பு உண்டு !


இந்த கவிதைக்கு மட்டும்தான்
எனக்கு என்றும் சலிப்பும் இல்லை !
எனக்கு என்றும் அலுப்பும் இல்லை !

அவ்வப்போது
உன் இதழ்கள் மீது
என் இதழ்கள் வைத்து
எழுதும்!

இனிய "கவிதை " க்கு !

எழுதியவர் : முபா (4-Nov-17, 3:49 pm)
பார்வை : 911

மேலே