முடிவு தேடும் தொடக்கம்!
ஏழு திணைகளாய்...
கடையெழு வள்ளல்களாய்...
வல்லரசுகள் தோன்றும்.
வேந்தரும் அரசருமாய்
அரசியல்வாதிகளுக்கு
ஊராட்சிகள் மாவட்டங்கள்
தனித்தனி நாடுகளாக்கப்படும்.
கப்பம் கட்டுவார்கள்...
விபச்சாரிகள் மீண்டும்
தேவதாசிகளாய்ப் போற்றப்படுவர்...
நக்கீரன் பாட்டில்
எந்தக் குற்றமும் இருக்காது...
முப்படைகளுக்குப் பதிலாக
அணுகுண்டு வீச்சுகள்...
உண்மைக் காதல் கொண்ட
ஓர் ஆண்
ஒரு பெண்ணைத் தவிர
பாம்பும் இறந்திருக்கும்...
இருவரும் ஆடையின்றித் திரிவார்கள்
விலக்கப்பட்ட கனியென்று
எதுவும் இல்லை.