கவிதைகளும் தத்துவங்களும் III
௧. நீ நானாகிப்பார் - நான்
நீயாயிருப்பது தெரியும்
௨. படைத்தவன் முன் போட்டிகள் தோல்வியே
௩. போதையில் மயங்கிய ஹார்மோன்
அவள் பார்வையால் இசைக்கிறது
௪. மனதினை வென்றபின் இனி
வெல்வதற்கு வேறேதும் இருப்பதாய் தெரியவில்லை.
௫. பல ஏமாற்றங்கள் வெளிப்பாடு
மறந்தும் யாரையும் ஏமாற்றிவிடக்கூடாது
என்பதாகவே இருக்கிறது.