வாய்க்கால் மீன்கள்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
கவிஞர் இறையன்பு இந்திய ஆட்சித்துறை அதிகாரி. மனித நேயமிக்க தனது கருத்து நேர்மைக்குக் கவிதையை நல்ல ஊடகமாகப் பயன்படுத்தியிருக்கிறார். கவிதை என்பது போதை தரும் சொற்களில் இல்லை. வெறும் ஓசைகளின் ஒழுங்கமைப்பில் இல்லை. இது தன்னைச் சுற்றியுள்ள உலகின் சமுதாய அசைவுகளை கவிஞன் எப்படி நுட்பமாகக் கவனிக்கிறான் என்ற பார்வையில் தான் இருக்கிறது என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். இவருடைய படைப்புகளும், கவிதை உலகின் ஆரோக்கியமான நடவடிக்கைகளுக்கும் கட்டாயம் பயன்படும் என்று நம்பலாம். இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பான “வாய்க்கால் மீன்கள்” இதனை உறுதி செய்கிறது.
சென்றைய எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டின் சிறப்பு அலுவலராகப் பணியாற்றியபோது எழுதிய நீளக்கவிதை. சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் மட்டுமே இதை எழுதியதற்கு நான் எடுத்துக் கொண்ட நேரம். நிறைய உவமைகளுடன் எழுதப்பட்டிருந்த அந்த காதல் கவிதை முரண்சுவை உள்ளதாகக் கருதப்பட்டது. தமிழக அரசின் 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்காக எனக்கு முதல் பரிசை வழங்கியது. இந்த நூலில் துயர முடிவை ஏற்றுக்கொள்ளாத பலர் மகிழ்ச்சியான உச்சகட்டத்துடன் ஒரு நூலைப் படைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வைகை மீன்கள் என்கிற நீளக்கவிதையை பின்னர் எழுதினேன்.
இறையன்பு