நான் சிந்தும் கண்ணீர்
நான் சிந்தும் கண்ணீர்
ஆறாக ஓடுமோ?
சோக ராகம்தான் அது பாடுமோ?உன்னை வந்து சேர்ந்திடுமோ?
இதழ்கள் பேசா வார்த்தையை
உன் கண்கள் பேசிடுமே
மொழிகள் இல்லா காதலில்
காதல் ராகம் பாடிடுமே.
அழகிய கைகொண்டு
அழைத்திடுவாய்
என்னை சிறகை விரித்து
வானில் பறக்க செய்திடுவாய்.
தியேட்டரில் ஒருநாள்
பீச்சினில் பலநாள் என
பொழுதை கழித்தோமே
காதலை வளர்த்தோமே.
நீதான் என் வாழ்வு என்றாயே
ஏனோ எனை நீங்கி சென்றாயே
தீயால் நெஞ்சை சுட்டாயே
வாழ்வேனோ? இல்லை சாவேனோ?
மனம்தான் பதைபதைக்குதடி
எண்ணம்தான் சிதைந்தடி
கண்களும் இருண்டதடி
வாழ்வின் பாதையும் முடிந்ததடி
நான் சிந்தும் கண்ணீர்
ஆறாக ஓடுமோ?
சோக ராகம்தான் அது பாடுமோ?
உன்னை வந்து சேர்ந்திடுமோ?