காகம் குயில் கோழி மனிதன்
![](https://eluthu.com/images/loading.gif)
காகம் கரைந்தால்
கடிதம் வருகிறது என்று பொருள் !
குயில் கூவினால்
வசந்தம் வந்து விட்டது என்று பொருள் !
கோழி கூவினால்
விடிந்து விட்டது என்று பொருள் !
அம்மா ஐயா தருமம்
என்று மனிதர்கள் கூவினால்
இந்த நாட்டில் வறுமை வாழ்ந்து
கொண்டிருக்கிறது என்று பொருள் !
வறுமையை ஒழித்து எல்லோரையும் செல்வந்தனாக்குகிறேன் என்று
அரசியல்வாதிகள் தேர்தலில் வாக்குறுதி அளித்ததால்
காதில் பூச் சுற்றுகிறார்கள் என்று பொருள் !