நட்பு
நாம் இத்தனை காலங்கள்
ஒன்றாக இருந்தோம்!
ஆசிரியர் பாடம் நடத்தும் போது
பல சேட்டைகளை செய்தோம்!
சில நினைவுகளுடன் பல
நாட்கள் வாழ்ந்தோம்!
பிரிவு என்னும் வலி வருவதையும்
மறந்து....!
ஆனால்
ஒரு நாள் பிரிவு என்னும்
அந்த வலி நம் மனதில் இடி
போல் வந்து பாய்ந்தது!
அந்த நொடியில் வேறு வழியில்லாமல்
அடுத்த இலக்கை அடைய வேண்டும்
என்ற நிபந்தனையில்
உன்னை விட்டு பிரிந்து செல்கிறேன்
நம் நட்பின் மறக்க முடியாத
நினைவுகளுடன்!!!!!!