இதயங்களின் வாசம்
இல்லற சாம்ராஜ்யத்தில்
மகுடங்கள் தரித்த
நன்னாள் இது...
திருமதி & திரு.குமார்
ஆகியோருக்கு...
இதுவரை எழுதப்படாத
அன்பெனும் காவியத்தில்
ஒரு குமாரும் ஒரு குமாரியும்
நாயகன் நாயகியான
நயமிகு நாளிது...
சிரித்துச் சிரித்து
இல்லற
சிறைப்பட்டு..
சிறையிலிட்டு...
கனவுகள் நினைவான
இனிய நாளிது...
இருமனங்கள் இணைந்த
இணைந்து மகிழ்ந்த
பொன்வசந்த நாளிது...
மனதில்...
ஆனந்தக் கும்மிகள்
அளவில்லாமல்
கொட்டிய நாளிது...
இதமான வாசம்...
பூக்களுக்கு மட்டுமல்ல
இதயங்களுக்கும் உண்டு...
அறிந்து தெளிந்த
அற்புத நாளிது...
எண்ணங்களின் திசையில்
நிகழ்வுகள் பயணிக்கட்டும்
மகிழ்ச்சி எப்போதும்
உங்கள் வசமாகட்டும்...
குமார் தம்பதியருக்கு
திருமண நாள்
நல்வாழ்த்துக்கள்...
🙋🏻♂🙋🏻♂👍👍🙏🙏🎂🎂🍰🍰