சுடும்

சுடும் !
கவிதை by : கவிஞர் பூ.சுப்ரமணியன்
நெருப்பை
தொட்டபின்
சுடும் என்பது
பட்டறிவு !
நெருப்பை
தொடாமல் சுடும்
அறிந்து கொள்வது
அனுபவ அறிவு !
நெருப்பை
அறிவுள்ளவன் தொட்டு
வேதனைப்பட்டு
நாளும்
அல்லல்படுகிறான் !
நெருப்பை
அனுபவமுள்ளவன்
தொடாமல்
மகிழ்வது போல்
அனுபவ உள்ளவன்
வாழ்விலும்
உயர்நிலை அடைகிறான் !
பூ.. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை சென்னை