கட்டினாள் முல்லைச் சரம் காதலில்

மொட்டவிழ்ந்தது முல்லை மலர்
மெட்டிசைத்துப் பாடியது வண்டுகள்
சொட்டியது தேனை வெள்ளை மலர்
கட்டிளம் காளை வந்தான் சீட்டி அடித்து
சிட்டு ஒருத்தியும் வந்தாள் முல்லைச் சிரிப்பினில்
சொட்டியது செந்தமிழ்த் தேன் அவள் இதழ்களில்
மட்டிலா மகிழ்ச்சியில் மலர் பறித்துக் கொடுத்தான்
கட்டினாள் முல்லைச் சரம் காதலில் ;தொடுத்ததைக் கொடுத்தாள்
கட்டிய சரத்தை கட்டியணைத்து அவள் கூந்தலில் சூட்டினான் காளை !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Dec-17, 9:44 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 86

மேலே