சொல் மனமே உன் காதலை

உன் விழிகள் என் மேல் பட்டதால் தோன்றியது அந்த வார்த்தை

சொற்களில் மிக சுவையான வார்த்தை அது உன்னை பார்க்கும் போது

நான் என்னை மறந்து சொல்ல நினைக்கும் சொப்பனமான வார்த்தை

வாட்டி எடுக்கும் உன் நினைவால் வானில் தோன்றும் வளர்பிறை போல

தேய் மானம் கொண்ட என் நெஞ்சில் தினம் தோறும் வந்து போகும்

வளமான வார்த்தையை ஏன் உன்னிடம் சொல்ல முடியவில்லை என்று

நினைக்கும் போது கண்ணீர் சொட்டும் வரிகளால் காதல் என்று மலர்வதை

புரிந்து கொண்டேன் எனது புன்னகை மலரும் மனதில்.

எழுதியவர் : (16-Dec-17, 10:51 pm)
சேர்த்தது : நீலகண்டன்
பார்வை : 488

மேலே