காலமெல்லாம் வாழ்க

காலமெல்லாம் வாழ்க
என் உயிர் நண்பனே!
மரணத்தின் பாதையில் ஒருவேளை
நீ எனக்கு முன்பாக இருந்து விட்டால்
வடக்கு நோக்கி தவமிருந்து
என் உயிரை மாய்த்துக் கொள்வேன்..

நான் முந்திக்கொண்டால்
எனைத்தாங்கும் நால்வரில்
நீ ஒருவனாக மட்டுமே.....
மூடுகின்ற மண்ணில்
ஒரு கைப்பிடி மண்ணாக மட்டும்...

வாழ வேண்டும் நீ...காலமெல்லாம்...
என் கண்களின் ஒளியாக..
என் கவிதைகளின் செறிவாக....

எழுதியவர் : kalavisu (18-Dec-17, 12:38 pm)
சேர்த்தது : kalavisu
Tanglish : kaalamellaam vazhga
பார்வை : 145

மேலே