உருகாதா மனம் உருகாதா – சக்கரவாகம்

சக்கரவாகம் ராகத்தில் அமைந்த ’உருகாதா மனம் உருகாதா’ என்ற பாடலை மதுரை சோமசுந்தரம் அவர்கள் பாடும் கச்சேரிகளில் பலமுறை கேட்டிருக்கிறேன். அப்பாடலை யு ட்யூபில் பாடப்பாட எழுதி இப்பாடலைப் பதிவு செய்திருக்கிறேன். பாடலாசிரியர் பெயர் தெரியவில்லை. பாலசந்திரக்கவி என்று ஒரு புத்தகத்தில் போட்டிருக்கிறது.

உருகாதா மனம் உருகாதா.. உனது மனம் உருகாதா
முருகா மனம் உருகாதா.. முருகா மனம்
உரகசயனன் மருகா உனது உள்ளம் உருகாதா (முருகா) 4

குருமணி எனவரும் குருமணி என வரும் சரவண பவ குக
கருணை வடிவேலா.. கருணை வடிவேலா
என் கவலையகல தினம் உருகாதா முருகா மனம்
உரகசயனன் மருகா உனது உள்ளம் உருகாதா

அருட்கனியே அம்மை.. அருட்கனியே அம்மை..
அருட்கனியே அம்மை அப்பனே என்று நான்
அடிக்கடி கண்ணீர் விட்டு அலறுகின்றேன்..

திருக்கயிலையில் உறை... திருக்கயிலையில் உறை
சிவனருள் சுதனே செய்தபிழை பொறுத்து..
செய்தபிழை பொறுத்து ஐயா என்னை ஆட்கொள்ள (உருகாதா)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Dec-17, 10:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 88

சிறந்த கட்டுரைகள்

மேலே