சாகித்திய அகாடமி

எதை எதிர்பார்த்து
எம் எழுத்து?

மனசைப் பிறாண்டியதை
மனசுக்குள் புதைக்க முடியாமல்
வார்த்தைகளில் மொழிபெயர்க்கிறோம்.

தொன்னையில் வாங்கித் தின்று
மொண்ணையாய் போகாமல்
கேட்பதைக் கேட்க
நாங்கள் அடித்த மணி,
எங்கள் பணி!

நீங்கள் அறியாமல் கிடக்கிறீர்கள்
அறிவதை – அறிய.

கை தட்டு, பணம், புகழ்,
பரிசு, விருது
எம்மைக்
கௌரவப் படுத்தவில்லை;
மாறாகக்
கொச்சைப் படுத்துகிறது.

எழுத்தே
எம்மை நிறுவும்....

-------------------------------------------------
இன்குலாப் நினைவுகளில்...
-------------------------------------------------

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (24-Dec-17, 7:00 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 50

மேலே