முதல் காதல்

முடிந்தாலும் முற்று
பெறாதது....
அழிவு என்ற ஒன்றை
அறியாதது....
எல்லோர் உள்ளங்களிலும்
ஓய்வு இன்றி
ஓடிக்கொண்டிருப்பது...
எந்த சூழ்நிலையிலும்
நம்மால்
விட்டு விலக முடியாதது....
ஆயிரம் வலியை
கொடுத்தாலும் என்றாவது
அவை அனைத்தையும்
நினைத்து ரசிக்க
கூடியது....
நம் உடல் மண்ணில்
புதையும் வரை
நம்மில் இருந்து
பிரிக்க முடியாதது...
என்றும் அழியா
சுடர் ஒளியாய்
நம்முள்
சுடர் விட்டு கொண்டிருப்பது.....
உன்னில் என்னில் இருப்பது .....

எழுதியவர் : அனிதா (11-Jan-18, 1:42 pm)
Tanglish : muthal kaadhal
பார்வை : 329

மேலே