பசி

பயிர்கள் உறிஞ்சி குடிக்கிறது
உயிர்கள் அடித்து சாப்பிடு கிறது
பறித்தும் சாப்பிடுகிறது

வயித்துபசிக்கும்
உடம்பு பசிக்கும்

அன்பா?
காதலா?
காமத்தால்

இதில்
சாகப்பட்சினி என்ன?
மாமிச பட்சினி என்ன?
அகிம்சை என்பது
அறவே இல்ல

பசியில்
உணவை சாப்பிடும் போதும்
உற்சாகம்
உடலை சாப்பிடும் போதும்
உற்சா கம்
திருப்தியான போதும்
போதும் என்று சோன்னதில்லை
பசியும் நின்றதில்லை

தொட்டு சாப்பிடா விட்டாலும்
கண்களால் சாப்பிட்டு விடுகிறோம்
காமத்தால்
கருத்தால் சாப்பிட்டு விடுகிறோம்
ஏக்கத்தால்

பசிக்கு முன்னால்
யாரும்பத்தினியுமில்லை
ராமனுமில்லை

பசிக்கு முன்னால்
கடவுளின் கால்களே தடுமாறும்போது
கருப்பையில் வந்தவரெல்லாம்
கடும் பத்தியத்திலா
காலம் கடத்தமுடியும்?

திருடினா தப்பு என்கிறார்கள்
இந்த உலகத்தில்
திருடாதவர் யார் பசிக்கு?

பசி இல்லாவிட்டாலும்
ருசிக்காக சாப்பிடுகிறோம் சில நேரத்தில்
பலநேரத்தில்
வாசனை வரும் பக்கம் திரும்பி
வாயை பிளக்கிறோம்

அசைவ சாப்பாடு
அசிங்கமானதும்மல்ல
சைவ சாப்பாடுசிங்கமானனதும்மல்ல

இதில்
காந்தி என்ன?புத்தன்என்ன?
எல்லோரும்
யோனி வழியாய் வந்தவர்தானே!

பசி
அறுபதி லும் இருக்கும்
ஆரம்பத்திலும் இருக்கும்
அடங்கிப் போகும்வரை

எழுதியவர் : (16-Jan-18, 8:15 am)
சேர்த்தது : பபூதா
Tanglish : pasi
பார்வை : 43

மேலே