மலர்கள் மலர்வது எதற்காக

மலர்கள் மலர்வது எதற்காக?
பூத்து குலுங்குது மலர்கள்
அதை பறிக்க போகுது கை
வேண்டாம்! சொல்லுது மனம்
கையா? மனமா?
தடுமாறுது எண்ணம்
பறந்து வந்தது சிட்டொன்று !
மலரில் அமர்ந்து
உறிஞ்சியது தேனை
சிட்டின் அழகில் மனம்
பல பல சிட்டுகள் பின்னால்
பட்டாம்பூச்சிகள் அடுத்து
சில பல பூச்சிகள்
ஓ ! எல்லாம் இதற்காக
சட்டென விழித்த்து மனம் !
மலர்கள் மலர்வது இவைகளுக்காக !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (27-Jan-18, 2:39 pm)
பார்வை : 316

மேலே