உன் விருப்பம் இல்லாமல்
உன் விருப்பம் இல்லாமல்
தென்றல் உன்னை தொடுமேன்றால்
தென்றலை சுவாசித்து கொன்றிடுவேன்
உன் விருப்பம் இல்லாமல்
நிலவும் உன்னை ரசித்தால்
எல்லா நாட்களையும் அமாவாசை
ஆக்கிடுவேன்
பூவில் ஊரும் வண்டு உன்னை
பூ என்று ரசித்திட அருகில் வந்தால்
உன் விருப்பம் இல்லாமல்
அதையும் கொன்றிடுவேன்
உன் விருப்பம் இல்லையென்றால்
என் காதலை நீ மறுத்தால்
காதலையும் கொன்றிடுவேன்
நட்பாய் நின்றிடுவேன்