சுக வாசம்

ஆன்மிகம் மனிதனை
ஆட்கொள்ள அது பரிபூரணமாய்
குடிகொள்ள வேண்டும்
அப்போது தான் அதன் தன்மை
பண்பு ஒழுக்கம் அறிவு
ஆற்றல் தெளிவு ஞானம் அவனிடம் புகலிடம்
ஒளியின் வழியில் அவன் பாதை
இதை விட்டு ஆன்மிகம்
வெறும் போலியாக விளையாட்டாகவோ
எடுத்துக் கொண்டால் நம்மை நாமே கேலி செய்து
பிறரையும் புண்படுத்துவதை காணமுடியும்
உண்மையின் வழி நடந்தாலே
நாம் செல்லும் பாதை ஆன்மிகம்
திருந்தி வா திரும்பிப் பார்
என்பது ஆன்மிகம் இல்லை
ஆன்மிகம் எல்லோருக்கும் வசப்படும் சுகந்தம்
ஏற்றுக் கொள்ளும் விதத்தில்
நம்மிடம் நிலைப்படும் சுக வாசம்

எழுதியவர் : பாத்திமாமலர் (31-Jan-18, 1:14 pm)
Tanglish : suga vaasam
பார்வை : 147

மேலே