முதுமொழிக் காஞ்சி 12

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஈர முடைமை ஈகையி னறிப. 2

அறிவுப்பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

ஒருவன் நெஞ்சில் கருணையுடையவன் என்பதை அவன் துன்புறுவர்களுக்கு உணவும், பிறவும் கொடுத்து உதவும் முறையினால் அறிவர்.

பதவுரை:

ஈரம் உடைமை - ஒருவன் நெஞ்சில் கருணையுடையவன் என்பதை, ஈகையின் – துன்புறுவர்களுக்கு உணவும், பிறவும் கொடுத்து உதவும் முறையினால், அறிப - அறிவர்.

கருத்து:

ஒருவனிடத்துக் கருணை உண்டு என்பதற்கு அவனுடைய ஈகையே அறிகுறி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Jan-18, 4:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 75

மேலே