காதல் கலாட்டா

சிரிக்க.... சிந்திக்க......

ரொம்ப நாள் கழிச்சு காதலர்கள் இருவர் சந்தித்துக் கொண்டார்கள்...நண்பனென்ற முறையில் வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.....

காதலி: நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.

காதலன்: நானும் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் வாழ்க்கையில் அன்பானவளை பார்க்கும் வாய்ப்பு இன்று தான் கிடைத்தது.

காதலி: என்னது?

காதலன்: அவ ரொம்ப அழகு. ரொம்ப அன்பானவள். எவ்வளவு அழகாக தன் காதலைச் சொன்னாள்.

காதலி: என்னது? நீ அவளையா காதலிக்கிறாய்?

காதலன்: அட! ஆமா. நான் அவளைத் தான் காதலிக்கிறேன்...

காதலி: அடப்பாவி! உன்னப் போய் நம்பிக் காத்திருந்தேனே ( விம்மி விம்மி அழுகிறாள்)

காதலன்: (சற்று அருகிலே நெருங்கி) அந்த பெண் நீ தான்..

காதலி: (கண்களை துடைத்தபடி) எனக்கு தான் தெரியுமே!

காதலன்: அப்புறம் ஏன் அழுத?

காதலி: உனக்கு மட்டும் தான் நடிக்கத் தெரியுமா?

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான்:(என்னை அறியாமலே) காலமெல்லாம் காதல் வாழ்க...
என்று வாழ்த்திவிட்டு வந்தேன்.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (1-Feb-18, 1:34 pm)
Tanglish : kaadhal kalattaa
பார்வை : 582

மேலே