மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி 5

மூர்ச்சையற்ற_பொழுதுகள்_௫

படிக்கும் திறனை எடை போடும் இடைத்தேர்வு நெருங்கியது.
நான்கு பேராய் சேர்ந்து குரூப் ஸ்டடி (ஆ)ரம்பமானது.
எதிர் பாலினத்தவர் எல்லாம் தீயாய் படிக்க ஆரம்பித்தனர்.ஆனால் கார்த்திக் & கோ மட்டும் அவள்களை பற்றி பேசி கொண்டு நேரத்தை தண்ணீராய் செலவழித்து கொண்டிருந்தது.
தேர்வு முடிந்து தேர்ச்சி அட்டையை கொடுக்கும் வாத்தியார் வந்து கொண்டிருந்தார்.எல்லோருக்குள்ளும் ஒருவித சந்தோசமும் கலக்கமும் கண்ணு மண்ணு தெரியாமல் மனசுக்குள் குதித்தோடி கொண்டிருந்தது.
அவளின் மீதான முதல் பார்வையும்,அவளை அடிக்கடி ஞாபகமூட்டும் முதல் நிகழ்வும் ஒரே நாளில் நிகழ்ந்தது.

மூன்று வருடம் பள்ளி செல்லாமல் இருந்ததால் சுமாராகத்தான் படித்திருந்தான்..
ஆனால் எல்லோரும் ஆச்சர்யபடும் அளவிற்க்கு கார்த்திக்தான் முதல் ரேங்க் எடுத்தான்.
அப்படியே ஒன்றுக்கு வலது பக்கத்தில் ஒரு பூஜ்ஜியத்தை சேர்த்து கொள்ளுங்கள்.
அந்த வகுப்பை பொருத்த வரையில் டாப் பத்து ரேங்கில் எவ்வித மாற்றமும் இருக்காது.
முதல் இரண்டு ரேங்க் ( பாத்திமா,பகவதி )பெண்களுக்கே முன்னுரிமை வழங்க பட்டு இருந்தது..
அதற்கடுத்து ஜெ.பி மாரி கனி,ஆனந்த் ,முத்து குமார்,விஜய லெட்சுமி,சண்முகத்தாய்,மரகதவல்லி, உத்தமன்,இவர்களுடன் மாலதியும் உன்டு..
முதல் ரேங்க் வரிசை படி பெயர் வந்தது,
கார்த்திக்கின் பெயரும் வாசிக்கப்பட்டது, மாலதியின் பெயருக்கு முன்னால்..
அவளுக்கான இடத்தை புதியதாக வந்த அவனால் அபகரிக்க பட்டது..
இவ்வளவு வருடங்களாய் தொடர்ந்து தக்க வைக்க பட்ட இடத்தை பிறர் ஆக்கிரமிக்கும் போது ஆணாக இருந்தால் கோபம் வரும்,ஆனால் அவள் பெண்ணாயிற்றே..
பலவீனத்துடன் சின்னதாய் ஒரு அவமானம்,அதன் எதிரொலியாய் இமைகளுக்கு அடியில் நீரூற்று பெருகி இருந்தது..
பிறர்க்கு தெரியாத படி இமைகளுக்கும் விரல்களுக்கும் இடையேயான சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு கொண்டிருந்தாள்.

தலை குனிந்திருந்த அவளின் முகத்தை,அவன் தலை நிமிர்ந்து பார்த்த போது உள்ளுக்குள் ஏன்தான் ரேங்க் எடுத்தமோ என்ற வெறுப்பும்,பிறரை காயப்படுத்தி விட்டோமே என்ற குற்ற உணர்வும் இதயத்தின் மூலையில் மூர்க்கமாய் சண்டையிட்டு கொண்டிருந்தது..
ஆகாயத்து மழைத்துளிகள் எல்லாம் கடல் நீரில் கலந்து உப்பு தண்ணீராகி உருமாறி போனது போல அவளின் கண்ணீரும் அவனின் இதய சமுத்திரத்தில் கலந்து விட்டது...
அவன் மனச்சாட்சி அவனுக்கெதிராய் மௌனமாய் வழக்காடியது.
திடீரென மாலதியின் உடைந்து அழும் சப்தம் கேட்டு எல்லோரும் அவளை பார்க்க,
உத்தமன் மட்டும் கார்த்திக்கை திரும்பி பார்த்து நீதான் இதற்கெல்லாம் காரணம்
உன்னால்தான் மாலதி அழுகிறாள்.நீ வரவில்லை என்றால் அவளும் அவளுடைய ரேங்கை இழந்திருக்கமாட்டாள் என்று அவனுடைய அதிருப்தியை கார்த்திக்கின் இ(ரு)தயத்தின் இடது புறம் விதைத்து சென்றான்.

அவளின் முதல் அழுகை இருள் சூழ்ந்திருந்த அவனுக்குள் யாரோ பொடி கற்களால் பொதடியில் தாக்குவது போல் இருந்தது.
அந்த விசும்பல் அவனுக்குள் மீண்டும் பின்னொரு நாளில் கேட்ட போது,
காதல் கழு மரத்தில் ஆனியால் அடிக்க பட்டிருந்தான்.
அந்த நாள் வேதாளம் போல பின்னாடியே வந்து கொண்டிருக்கிறது.

வேதாளத்தின் கேள்விகளுக்கு விடையளிப்பவர் யாரோ...

எழுதியவர் : சையது சேக் (5-Feb-18, 5:08 pm)
பார்வை : 198

மேலே