​ஏற்றிவிடு சமநிலைக்கு

​​​​ஏழையாய் பிறந்தவரை
ஏடுகம் செல்லும்வரை
ஏளனமாய் காண்பதேன் ?

ஏழ்மை நிலைகண்டா
ஏமாளி அவனென்றா
ஏய்ப்பது எளிதென்றா ?

ஏற்றம்பெற வழியிருந்தும்
ஏற்றவன் இல்லையென
ஏற்புரை நிகழ்த்துவதேன் ?

ஏழைபாழை என்றாலே
ஏவலாளி என்றநிலை
ஏனிங்கு தொடர்வதேன் ?

ஏற்றத்தாழ்வு சமூகத்தில்
​ஏற்றுமதியும் ஆகாதோ
​ஏறுகடை வந்திடாதோ ?
​​
​ஏறுமுகம் வருமென்று
ஏங்கிடும் ஏழைகளும்
ஏற்றமும் அடைவாரோ ?

​​​ஏகபோக உரிமையும்
​ஏற்றமிகு நிலையும்
​ஏழைக்கு பகல்கனவா ?

​ஏறெடுத்தும் பார்க்காத
ஏற்றமிகு சமுதாயமே
​ஏற்றிவிடு சமநிலைக்கு !
​ -------------------

​ ( ஏடுகம் = கல்லறை ) ​
​ ( ஏறுகடை = இறுதிமுடிவு )​ ​



பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (10-Feb-18, 10:36 pm)
பார்வை : 266

மேலே