காதலை ஏற்று கொள்வாயா இல்லை கொல்வாயா

இன்று சந்தோஷமும்,வருத்தமும் சரிசமமாய் இருந்தது..
இரண்டிற்கும் காரணம் நீதான்.
தொலைப்பேசியில் உன் குரலை கேட்டதும் தொலைவில் இருக்கும் என் குரல் தழுதழுத்தது..
நீ பேசி முடிக்கும் வரை,
எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை..
வழ வழவென்று தயங்காமல் பேசினோம்,
ஆனாலும்,
நம் வாழ்க்கை சம்பந்தமாய் பேச தயங்கினோம்..
நீ தொடர்ப்பை துண்டித்த போதுதான்,
நான் தொடர்ந்து தண்டிக்க பட்டதை போல உணர்ந்தேன்..
ஒவ்வொரு அலைபேசி அழைப்பையும் ஆவலுடன் எடுக்கிறேன்,
அது யாராக இருந்தாலும் உன்னைத்தான் ஞாபகப்படுத்துகிறது,.
அடுத்து நீ பேசும் வரை,
இன்று நீ பேசிய வார்த்தைகளே,
எனக்கு கடைசி வாக்குமூலம்..
என் சந்தோஷத்தின் முகவரி நீதான்,.
உன்னை தொலைக்கமாட்டேன்..
ஆனாலும் உனக்குள் தொலைய துடிக்கிறேன்.
நீ எப்போதாவது தான் என்னை நினைக்கிறாய்,
நானோ எப்போதுமே உன்னால் நினைவை இழக்கிறேன்..
நான் உன்னை சேர வேண்டும் என்று எப்போதாவதுதான் நினைக்கிறேன்,
ஆனால்,
உன்னை பிரியவே கூடாது என்று எப்போதுமே தவிக்கிறேன்.
நான் உன்னை விரும்புவது, உனக்கு தெரியும் என்பதும் உன்மை,.
நீ என்னை விரும்பவில்லை என்று நடிப்பது,.
எனக்கு தெரியும் என்பதும் உன்மை.
நீ என்னை மட்டுமல்ல,
உன்னையும் சேர்த்து ஏமாற்றி கொண்டிருக்கிறாய்,.
உன்னை சுற்றி இருக்கும் மாயையை உடைத்தெறி,
உன்னையே சுற்றி வரும் என் மனதை உடைத்துவிடாதே,.
என் மனவலிமையை விட,
மனதின் வலி அதிகம்தான் பெண்ணே!

எழுதியவர் : சையது சேக் (14-Feb-18, 11:25 am)
பார்வை : 100

மேலே