அம்மா

எத்தனை தெய்வங்கள் வந்தாலும்
வரங்கள் கோடி தந்தாலும்
ஒரு தாயின் அன்புக்கு ஈடாகுமா
அவளின் தியாக சேவைக்கு நிகராகுமா...?

எத்தனை பிறவிகள்
எடுத்தாலும்
கண்ணுக்குள்
வைத்து காத்தாலும்
அவளது பாதங்களுக்கு
பாலாபிஷேகம் செய்தாலும்
அவள் ஊட்டிய ஒரு சொட்டு
தாய்பாலுக்கு ஈடாகுமா...?

புதுமைக்கு
புதுமையானவள்
பழமைக்கு
பழமையானவள்
பேசும் தெய்வம்
உறவுகளிலே
புனிதமானவள்
உலகத்திலே
உன்னதமானவள்
அன்பிலே தூய்மையானவள்
இன்னல்களை தாங்கி
தாய்மையானவள்
அம்மா ஒரு அற்புதமான பந்தம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (19-Feb-18, 3:08 pm)
Tanglish : amma
பார்வை : 1353

மேலே