நெருநல் நிசப்தம்

அவன்: குறிஞ்சி கண்ட தொண்ணூற்றுண்பது மலரும்
உன் சிகை காண அவா கொள்ளுமடி.......

அவள்: உம் தலையாழி தருமமெனில்
ஒன்றேனும் சிகை காண செய்யுங்கள்

அவன்: உன் சிகை கண்ட மறுநொடி
மோட்சம் பெற்றதாய் இனமழியுமே!

அவள்: நித்தம் நினைவில் வாழும் என்னை காட்டிலும்
மோட்ச நிலை ஆராய்ச்சி தேவைதானா?

அவன்: ஒற்றை பூ சிகை கண்டால், ஏக்கத்தில்
மற்ற பூ மாண்டழியுமே! என்ன செய்வேன்!

அவள்: ஐவகை நிலத்தை நினைவில் கொள்ளும் தாங்கள்
ஆருயிரே நினைவில் கொள்ளாததேனோ?

அவன்: நீண்ட சிகையே பாரமுனக்கு!
மென்மேலும் பாராமெதற்கு?

அவள்: உம் உலகம் சுமக்கும் தமிழச்சி
பூ தாங்க மாட்டாளா?

அவன்: அழகு கண்டு ரம்பைகள்,
ஆகாயம் துறந்து வந்தால் என்ன செய்வது?

அவள்: ஆசை வேண்டாம்.
உமை கண்கட்டி புறம் தள்ளி
தலையாழி விருந்தளித்து வெற்றிலை மடித்தனுப்புவேன்.
கவலை வேண்டாம்.......

அவன்: குஜராத்தில வாழைப்பூ கூட கிடைக்காதே
என்ன பண்றது?

அவள்: அப்புறம் என்ன மண்ணாங்கட்டிக்கு
கவிதை சொல்றேள்.......
துணிய தொவைங்க..........

அவன்: நிசப்தம் .........

எழுதியவர் : கார்த்திக் (25-Feb-18, 12:29 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 43

மேலே