தென்றல்_காற்றே_ மெல்ல_வீசுகிராமிய கவிதை

தென்றல்_காற்றே_
மெல்ல_வீசு
கோபம் இன்றி என்னை கிள்ளி //
முத்தம் ஒன்று தந்து போ //
கவலை உள்ளமும் உடை பட்டு //
கண்ணீர் துளிகள் வெளியேறட்டும்

தில் தில் மனதில் ஏதோ ஒரு தில்//
மண்வாசனையுடன் பூத்தது ஒரு காதல்/
சிரிச்சு சிரிச்சு பேசி மன மெல்லாம் குலுங்க செய்தவள்//பச்சை நிற சேலை கட்டிகிட்டு//
பசுமையாக இழுத்து மயக்கியவள்//

அந்தி சாயும் நேரத்திலே // அம்மன் கோயில் வீதியிலே என் வருகைக்காக
காத்திருந்து // கண் சிமிட்ட மறந்து இருப்பாள்

உயிரோட உயிர் சேர்ந்து என்
கூட வாழுறப்போ,//
மிடுக்கான பார்வையிலே
சொடுக்கு போட்டதுமே//
எங்கள் விழிகள் காதலில் மயங்கி இருக்கையிலே//
காதல் புரியாத அவன் அப்பன் //
விடலை பொடியங்களை கூட்டி வந்து //
உசிர கொல்லும் வார்த்தைபேசிI //
அவளை இழுத்துச் சென்றனர்//
கண்ணெதிரே காதல் Iஇருந்தும்,,
கண்ணுக்கெட்டா தூரத்துல போனாலும்
சொப்பனத்தில் சேர்வோமோ //
தூது செல்ல யாரும் இல்லை
துரதிஷ்டசாலி நானே

எழுதியவர் : காலையடி அகிலன் (2-Mar-18, 11:20 pm)
பார்வை : 86

மேலே