ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய

தீ தீண்டும் வரை
நான் வாழும் வரம்
நீ இட்ட பிச்சை
ஓம் நமசிவாய

நான் வேகும் வரை
உனை சேரும் வரை
உடற் கூடு வரை
யாவும் கலந்தாய்
ஓம் நமசிவாய

காட்சி பிழை என
யாவும் பொருள் தர
உண்மை நிலை தனை
தேடி அலைந்துனை
சேர்ந்து தெளிந்தேன்
ஓம் நமசிவாய

ஆலையம் திரிந்தும்
காடு மலை கடந்தும்
எங்கும் நீ இல்லை
என்று தெளிந்த பின்
என்னுள் கலந்திட்ட
நீயும் சுடர் விட்டாய்
ஓம் நமசிவாய


காலை மாலை என
கால முறை தனில்
காட்சி கொடுக்கும்
கல்லை தேடி தேடி
கூட்டம் கூட்டமாய்
அலைந்திடும் உலகில்
அறிந்து தெளிந்தேன்
அனைத்திலும் நீ என
ஓம் நமசிவாய

உடற்கூடு தனை விட்டு
உயிர் பிரியும் நேரத்திலும்
உடன் வரா சொந்தங்கள்
ஒப்பாரி இடுகையிலும்
நாவறண்டு கிடந்து
நானும் வரண்ட பின்னும்

உலகத்தின் என் அடையாளம்
உடலோடு முடிந்த பின்னும்
தற்காலிக குடியிருப்பென
உடல் துரத்திய உயிரோடு
நிரந்தர முகவரி
உன் பாதம் என்றுணர்ந்து
உடல் விட்டு
உலகம் விட்டு
சொந்த பந்த
மாயை அறுத்து
உன்னை உயிர் வந்து
அடையும் காலம் வரை
காத்தருள்வாய் பார்த்தருள்வாய்

ஓம் நமசிவாய


ந.சத்யா

எழுதியவர் : ந.சத்யா (5-Mar-18, 12:14 pm)
சேர்த்தது : சத்யா
பார்வை : 589

மேலே